தர்மபுரியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ?

x

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவராகப் பணியாற்றிவரும் கிருஷ்ணனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அரசு திட்டங்களை முறைகேடாக பயன்படுத்தியாகவும், கொரோனா காலத்தில் ப்ளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணனின் வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்