முன்னாள் முதல்வர் கொடுத்த நிவாரண பணத்தை அவர் மீதே தூக்கி வீசிய பெண் - பரபரப்பு சம்பவம்

x

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கொடுத்த நிவாரண தொகையை, அவர் மீதே பெண் ஒருவர் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறையில் 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதிக்கு நேரில் சென்ற சித்தராமையா, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த‌தோடு நிவாரண தொகையையும் வழங்கினார். அப்போது ஆத்திரம் அடைந்த பெண் ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகையை சித்தராமையா மீது வீசி எறிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்