அஜித்தை பார்க்க அடித்து பிடித்து வந்த ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - கடைசியில் ஒரு ட்விஸ்ட்

x

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடிகர் அஜீத்குமாரை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு நடிகை யாஷிகா ஆனந்த் ஆறுதல் அளித்தார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று நடிகர் அஜீத்குமார் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் பரவியது. இதை அறிந்து கோயிலின் முன் ஆவலுடன் திரண்ட ஏராளமான ரசிகர்கள் 1 மணி நேரம் காத்திருந்தும் அவர் வராததால் ஏமாற்றமடைந்தனர். அப்போது சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகை யாஷிகாஆனந்த்-ஐ பார்த்த ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்