அதிமுக முன்னாள் எம்எல்ஏ- கடத்தல்.. சிக்கிய முக்கிய குற்றவாளி - பாயப்போகும் குண்டர் சட்டம்

x

ஈரோட்டில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வை கடத்தி சென்று பணம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன். இவரை கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி கடத்தி சென்ற 7 பேர் கொண்ட கும்பல், ஈஸ்வரனை சரமாரியாக தாக்கி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் நிர்வாகி மிலிட்டர் சரவணன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், 7 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் முக்கிய குற்றவாளியான மிலிட்டர் சரவணன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்