நெற்றி பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டிய அதிமுக, பாஜக நிர்வாகிகள் - சென்னை அருகே பரபரப்பு

x

திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டிய அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரை சேர்ந்த கண்ணன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஸ்ரீனிவாசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் சுமார் 18 கோடி ரூபாயை நிலம் வாங்குவதற்காக கண்ண​ன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக நிர்வாகி வெங்கடேசனை கண்ணனிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ஸ்ரீனிவாசன். அப்போது, வங்கியில் கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தலாம் என வற்புறுத்திய ஸ்ரீனிவாசன் , நிலத்தை அடமானம் வைத்து வங்கியில் 3 கோடி ரூபாய் கடன் பெற முயன்றுள்ளார். இதற்கு கண்ணனும், அவரது மனைவியும் கையெழுத்திட்ட நிலையில், அந்த கையெழுத்துகளை வைத்து மற்றொரு வாங்கியில் ஆள்மாறாட்டம் செய்து இருவரும் கடன் பெற முயற்சித்துள்ளனர். இதையறிந்து அதிர்ச்சியடைந்த கண்ணன், இதுவரை கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நிலையில் அவரின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து இருவரும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீனிவாசன் மற்றும் வெங்கடேசனை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்