கொரோனா ஊரடங்குக்கு பிறகு - வெற்றிகரமான100வது ரைடு!

x

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே அலையன்ஸ் ஏர் விமானம் தனது 100வது சேவையை நிறைவு செய்தது... இலங்கை மற்றும் இந்தியா இடையில் விமான சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே 100வது முறையாக விமான சேவையில் ஈடுபட்டது. கொரோனா ஊரடங்கால் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்ட நிலையில், அப்போதிருந்து தற்போதுவரை, 10 ஆயிரத்து 500க்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 4 தடவை இயக்கப்பட்டு வரும் இச்சேவையை 7 முறையாக அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்