சீனர்களை குறிவைத்த ஐஎஸ் தீவிரவாதிகளை போட்டுத்தள்ளிய தலிபான்கள்.. திகில் காட்சி

x

காபூல் நகரில் சீனர்கள் மீது தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள லங்கான் ஓட்டல் சீன தொழில் அதிபர்கள் அடிக்கடி வரும் ஓட்டலாகும். இங்கு அதிரடியாக நுழைந்த ஆயுதம் தாங்கியவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளும் வெடித்தது. ஓட்டலில் இருந்து கரும்புகை வெளியேறியதற்கு மத்தியில் மக்கள் உதவி கோரும் காட்சிகளும் வெளியாகியது. இதற்கிடையே தலிபான் படைகளும் அங்கு வந்து பதிலடியை கொடுத்துள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய மூன்று பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், 2 வெளிநாட்டவர்கள் மட்டுமே காயம் அடைந்துள்ளதாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்