வண்டலூர் கோயில் குறித்து தகவல் கேட்ட வழக்கறிஞருக்கு அடி, உதை - சென்னையில் பரபரப்பு..!

x

வண்டலூர் பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் கோயில் ஒன்று கட்டப்பட்டு, அதற்கு மின் இணைப்பும் பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்செல்வன், கோயிலுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது எப்படி என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் தலைவர் குணசேகரனும் மேலும் சிலரும், தமிழ்செல்வனை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்