அதிமுக அமைப்பு செயலாளர் மகன் தற்கொலை..

x

அதிமுக அமைப்புச் செயலாளர் ஜி.ராமமூர்த்தியின் மகனான ஜி.ஆர். கார்த்திக், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவராக இருந்தவர். மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பெரும்பாலான மாடுகள் இவரது பெயரில் அவிழ்க்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக ஜி.ஆர்.கார்த்திக், கத்தியால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை ஜி.ஆர்.கார்த்திக் உயிரிழந்தார். உடற்கூராய்வுக்காக அவரது உடல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்