சாதிய வன்மத்தில் செயல்பட்டாரா?... மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

x

சாதிய வன்மத்துடன் அரியலூர் ஆட்சியர் செயல்படுவதாக எழுந்த புகார் குறித்து 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பட்டியலின வகுப்பு அலுவலர்களிடம் ஆதிக்கத்தை செலுத்தி வருவதாகவும் இதனால் வட்டாட்சியர் தேன்மொழி தற்கொலை முயற்சித்ததாகவும் புகார் எழுந்தது.

பல பட்டியலின அதிகாரிகளை அவர் பல்வேறு விதத்தில் துன்புறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

சாதிய வன்மத்துடன் அரியலூர் ஆட்சியர் செயல்பட்டாரா என்பது குறித்து 2 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச்செயலாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்