அப்துல் கலாம் விருது பெற்ற முனைவர் இஞ்ஞாசி முத்து.! "பணத்தை மாணவர்களின் உதவித் தொகைக்காக வழங்குவேன்"

x

முதல்வர் ஸ்டாலின் கைகளால் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதை பெற்ற முனைவர் இஞ்ஞாசி முத்து, தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை மாணவர்களின் உதவித் தொகைக்காக பயன்படுத்தப் போவதாக தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உள்ள சவேரியார் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார் இஞ்ஞாசி முத்து... இந்தியாவில் 10வது சிறந்த விஞ்ஞானியாக அடையாளம் காணப்பட்டுள்ள இவர், முன்னணி அறிவியல் இதழ்களில் 700க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் . மேலும், இவர் 31க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி பதிப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்