இறந்த பின்னும் துடிக்கும் இதயம் 8 பேரின் உடலில் வாழும் இளைஞர்

x

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு எட்டு பேரின் மறுவாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள கக்கனூரை சேர்ந்தவர் சந்தோஷ். நேற்று முன் தினம் நடைபெற்ற சாலை விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ், மூளைசாவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சந்தோஷின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு நுரையீரல், இரண்டு கருவிழிகள் ஆகியவை மனைவியின் சம்மதத்துடன் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டன. பின்னர் அந்த உறுப்புக்கள் சென்னை மற்றும் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு , 8 பேருக்கு மறு வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்