7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாயாக மாறிய இளம்பெண்

x

கடந்த 7 மாதங்களில் ஆயிரத்து 400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கி இளம் பெண் ஒருவர் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோயம்பத்தூரில் உள்ள கனியூரை சேர்ந்தவர் 29 வயதான சிந்து மோனிகா.

பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 7 மாதங்களாக 50 ஆயிரம் மில்லி தாய்ப்பாலை சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக கொடுத்து வந்துள்ளார்.

இதனால் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சிந்து மோனிகாவின் சாதனையை அங்கீகரித்த ஆசிய மற்றும் இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்