நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் - செல்போன் மோகத்தால் பலியான இளம்பெண்

x

சென்னையில், செல்போன் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற இளம்பெண் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஏர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ஷாலினி என்ற இளம்பெண், ஆவடி அருகே பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு, மின்சார ரயில் மூலம் விம்கோநகர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய ஷாலினி, செல்போன் பேசியபடி, தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக விரைவு ரயில் மோதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்