"ஆத்தி என்ன பார்வையே திகிலா இருக்கு" - சாலையில் சுற்றித் திரிந்த காட்டு யானை

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். அஞ்செட்டி வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இங்கு வாழும் காட்டு யானைகள், அவ்வப்போது உணவு தேடி சாலைகளில் முகாமிட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, சாலையில் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்தது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்