தலைமுடியால் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த மாணவன் - தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம் | dharmapuri

x

தர்மபுரி அருகே தலைமுடியை சீராக வெட்டச் சொல்லி தந்தை கண்டித்ததால், மாணவன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கணவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாதப்பன். இவரது மகன் நித்திஷ், அதேப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் மாடலாக முடி வெட்டியதை, அவரது தந்தை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மாணவன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. ஒரு வாரகாலத்திற்கும் மேல் மாணவன் வீடு திரும்பாத நிலையில், போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்