பெண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத கிடா வெட்டு பூஜை! - அருள் வந்து சாமி ஆடிய பெண்கள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெண்கள் மட்டுமே பங்கேற்று, மாரியம்மன் கோவிலுக்கு கிடா வெட்டி வினோத பூஜை நடத்தினர்.

நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், அங்கு 200 வருடங்கள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த மாரியம்மன் கோயிலில் கிராம மக்கள் பூஜை செய்து வருகிறனர். இந்நிலையில், கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் ஒன்றிணைந்து, மாரியம்மன் கோயிலுக்கு சிறப்பு பூஜைகள் செய்ததோடு, கிடா வெட்டி வினோத பூஜைகள் செய்தனர். அப்போது, அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி வந்து ஆடினர்.


Next Story

மேலும் செய்திகள்