கடத்தலுக்கென்றே பிரத்யேக லாரி... போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி- டன் கணக்கில் குட்கா

x

ஓமலூர் அருகே மரத்துக்குட்டை பகுதியில் வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து விரைந்து நடத்திய சோதனையில், வாடகைக்கு வீடு எடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குட்கா பொருட்களை கடத்துவதற்கே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஈச்சர் லாரியும் கைப்பற்றப்பட்டது. மேலும், வீட்டை வாடகைக்கு எடுத்துள்ள மணி என்பவர் குறித்தும், போலீசார் வருவது எப்படி முன்கூட்டியே கடத்தல்காரர்களுக்கு தெரிந்தது என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்