14 நகரங்களில் சதமடித்த வெயில்-தமிழகத்தில் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

x

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பல இடங்களில்100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. இயல்பை காட்டிலும் 2-லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கூடுதலாக பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்,14 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில், கரூர் பரமத்தி, சேலம், மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில்100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் சுட்டெரித்தது.


Next Story

மேலும் செய்திகள்