முயல்..கீரி..கவுதாரி..அணில்.. சாமிக்கு படையல் போட வன விலங்குகள் - வேட்டையாடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

x
  • கருப்பசாமி கோவிலில் படையலிட வன விலங்குகள் வேட்டை 29 முயல்கள், 3 கீரி, கவுதாரி, அணில் பறிமுதல் வன விலங்குகளை வேட்டையாடிய 2 கிராமத்தினர் 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை வன விலங்குகளை வேட்டையாடிய 20 பேர் கைது
  • ஆர்.ஆர்.நகர் மற்றும் பூசாரிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனப் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
  • இதனையடுத்து, வனப்பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் கருத்தழக்கம்பட்டி மற்றும் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள், கருப்பசாமி கோவிலில் படையலிடுவதற்காக, வன விலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது.
  • தொடர்ந்து, அவர்கள் வேட்டையாடிய, 29 முயல்கள், மூன்று கீரி, கவுதாரி மற்றும் அணிலை வனப்பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
  • மேலும் 2 கார்களையும் பறிமுதல் செய்த வனப்பாதுகாப்பு படையினர், 2 கிராமங்களைச் சேர்ந்த 100 பேரிடம் விசாரணையில் ஈடுபட்டு, 20 பேரைக் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்