காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்று உயிரை விட்ட காதலன்-நைட் 12 மணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞரும், தன்யா என்ற இளம்பெண்ணும், காதலித்து வந்த நிலையில், அடுத்த ஆண்டு திருமணம் நடக்க இருந்தது. தன்யாவின் பிறந்தநாளையொட்டி, நள்ளிரவு 12 மணியளவில் தனது நண்பர்களுடன் பிரசாந்த், மதுபோதையில் தன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் கதவை தட்டியபோது, உறவினர் விக்னேஷ் என்பவர் கதவை திறந்துள்ளார். பிரசாந்த் மதுபோதையில் இருந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு, விக்னேஷ் பிரசாந்தை குத்தியதில் அவர் சரிந்து விழுந்தார். இதனிடையே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரசாந்த், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விக்னேஷ் மற்றும் பெண்ணின் தந்தை மகாதேவனை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்