வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு சென்றவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்

x

திண்டுக்கல்லில் தன்னிடம் கடன் வாங்கிய உறவினர் ஒருவர் நீண்ட காலம் ஆகியும் கடனை திருப்பி தராததால் விஷேச நிகழ்ச்சிக்கு வந்த அவர்களை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

நத்தம் பகுதியில் வசித்து வரும் ஓட்டுநர் ராமன், கடந்த 2 வருடத்திற்கு முன்பு தன்னுடைய உறவினர் ராஜேஷ் என்பவரிடம் இருந்து 1 லட்ச ரூபாயை கடனாக பெற்றுள்ளார். கொரோனா காலகட்டத்தில் வட்டியை சரியாக கட்ட தவறியதால் பணத்தை திரும்ப தருமாறு ராஜேஷ் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பதற்காக ராமன் தன் மனைவி மற்றும் மகனுடன் சாத்தாம்பாடிக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்களை கண்ட ராஜேஷ் பணத்தை தருமாறு கேட்கும் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், ராமன் மற்றும் அவரது மனைவியை கம்பத்தில் கட்டி வைத்து கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராமனின் மகன் ஜோதிமணி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்