அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த மாமன்ற உறுப்பினர்... இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன..!

x

மாநகராட்சியின் 42ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரேணுகா காவிரி செல்வம் என்பவர் இருந்து வருகிறார். இவர், ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் தனது இரண்டாது குழந்தையை பிரசவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட ரேணுகா காவிரி செல்வம், தனக்கு முதல் குழந்தையும் அரசு மருத்துவமனையில் தான் பிறந்தது என்றார். மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையை பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு அரசுத் துறைகள் மீது நம்பிக்கை வரும் எனவும், வெகு ஜனங்களில் ஒருவராய் இருந்து செயல்படும்போது தான் மக்கள் படும் துன்பங்களை புரிந்துகொள்ள முடியும் எனவும் மாமன்ற உறுப்பினர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்