திடீரென துப்பாக்கியோடு கிராமத்திற்குள் புகுந்த மாவோயிஸ்ட் கும்பல்

x

கேரள மாநிலம் எடப்புழா பகுதிக்குள் துப்பாக்கியோடு நுழைந்த 5 பேர் கொண்ட மவோயிஸ்ட் கும்பல், அப்பகுதி மக்களிடையே ரேஷன் விலை குறைப்பு குறித்து பிரசாரம் செய்துள்ளனர். மேலும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கையால் எழுதப்பட்ட போஸ்டர்களை அப்பகுதியில் ஓட்டிய கும்பல், காய்கறிகள், எண்ணெய், ரொட்டி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றுள்ளனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று, மாவோயிஸ்ட் கும்பல் வந்து சென்றது குறித்து விசாரணை நடத்தினர். மாவோயிஸ்ட் கும்பல் கிராமத்திற்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்