மாற்றுத்திறனாளி சிறுமியை சீரழித்த கும்பல்... திண்டுக்கலில் அதிர்ச்சி

x

நத்தம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் அருகே, மாற்றுத்திறனாளியான 16 வயது சிறுமியை 3 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார், மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அச்சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்த நிலையில், அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்