ஒரு குடும்பமே ஒரு ஊராய்.. 5 தலைமுறையை பார்த்த தாத்தா.. ஆயுசு கெட்டிக்கு பாட்டி தான் காரணமாம்

x

கோவை மாவட்டம் சூலூர் அருகே, ஐந்து தலைமுறை கண்ட முதியவருக்கு 101ஆவது பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு, மீனாட்சியம்மாள் என்ற மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் ஒன்பது பேரன்கள், ஐந்து பேத்திகள், 15 கொள்ளு பேரன்கள், 15 கொள்ளு பேத்திகள் மற்றும் எள்ளு பேரன் பேத்தி உள்ளனர். இதனிடையே, ஐந்து தலைமுறை கண்டு 101 வயதை எட்டிய பொன்னுசாமிக்கு, புதிய தலைமுறையினர் ஒன்று கூடி பிறந்த நாள் கொண்டாடினர். மேலும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் பொன்னுசாமி - மீனாட்சி அம்மாளை வாழ்த்தி ஆசி பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்