குதிரை மேல் நின்றவாறு 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி அசத்தல் | Coimbatore

x

கோவை சின்னவேடம்பட்டியில், குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன், சாதனை படைத்துள்ளார். தமிழ்வாணன் - உமாமகேஷ்வரி தம்பதியரின் மகன் ரோகன்குமார். எல்.கே.ஜி படித்து வரும் ரோகன் குமார், முறையாக சிலம்பம் பயின்று வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி அசத்தினார். இந்நிலையில், சாதனை முயற்சியாக குதிரை மேல் ஏறி நின்று தொடர்ந்து இரண்டு மணி நேரம், இரட்டை சிலம்பம் சுற்றி நோபல் வேல்டு ரெக்கார்டு செய்துள்ளார். மேலும், சிலம்பம் சுற்றியவாறு உடல் உறுப்புகள் மற்றும் விழிப்புணர்வு படங்களை வரைந்தும் சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்