வெறும் ரூ.2,000 கடனுக்காக 2 வயது ஆண் குழந்தை கடத்தல்... கொடூர தம்பதி அரங்கேற்றிய அதிர்ச்சி சம்பவம்

x

2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் குழந்தையை, ஜோலார்பேட்டையில் இருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார் பிடித்தனர்.

https://youtu.be/OETu7pB8zIwதிருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 வயது ஆண் குழந்தையுடன் ஒரு தம்பதி சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் வேலு மற்றும் வள்ளி என்பது தெரிய வந்த‌து. அவர்களிடம் இருந்த குழந்தை, டென்னி என்ற சக தொழிலாளியின் குழந்தை என்பதும், 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு டென்னி தராத‌தால் குழந்தையை கடத்தியதும் அம்பலமானது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு, திருப்பூர் போலீசார் தகவல் தெரிவித்த போது, குழந்தையை காணவில்லை என புகார் அளித்திருப்பது தெரிய வந்த‌து. இதையடுத்து, பென்னியை வரவழைத்து குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர். மேலும், குழந்தையை கடத்தி வந்த வேலு, வள்ளி ஆகிய 2 பேரையும் ஜோலார்பேட்டைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்