கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆய்வுக்கு அனுப்பபடும் 8 செல்போன்கள்...

x

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, 9 பொருட்களை சி.பி.சி.ஐ.டி போலிசார் கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள், ஜெயலலிதா மற்றும் சசிகலா அறைகள், ஸ்டோர் ரூம் ஆகியவற்றில் சில பொருட்கள் என மொத்தம் 9 பொருட்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொடநாடு மேலாளர் நடராஜன் மற்றும் வழக்கில் சாட்சியாளராக சேர்க்கப்பட்டுள்ள முனிராஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, புகார்தாரர் கிருஷ்ணதாபா, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனராஜ், அவரது சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் மற்றும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள தீபு, ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய்

ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட 8 செல்போன்கள், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை ஆய்வுக்கு அனுப்ப மாவட்ட நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்