73 வயது முதியவர் மாயமான விவகாரம் -தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு

x

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காணாமல் போன 73 வயது முதியவரின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவர், கொரோனா சிகிச்சைக்காக 2020ஆம் ஆண்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தப்பிச் சென்ற அவரை கண்டுபிடித்து தரக் கோரி, அவரது மகன் மணிவண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆதிகேசவனை தேடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என காவல் துறைக்கு அறிவுறுத்தியதுடன், அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்