சிறுவனை கடித்து குதறிய 6 நாய்கள்.. 40 இடங்களில் கொடூர காயங்கள் - ஐசியூ-வில் அனுமதி..

x

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

கடந்த 10 மாதத்தில் தெருநாய்களின் கடிக்குள்ளான 21 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனூர் பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்ற 4 வயது சிறுவனை 6 தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த சிறுவனின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது சிறுவன், மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சிறுவனின் தலை, முதுகு, கால் உள்ளிட்ட இடங்களில் 40 காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்