அசுர வேகத்தில் வந்த காரால் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 5 வண்டிகள் - டிரைவரை இழுத்து போட்டு சாத்திய மக்கள்

x

புதுச்சேரியில் அதி வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய காரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஓட்டுனருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

அதிலிருந்தவரை நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி நகரப்பகுதியான செஞ்சி சாலையில் கார் ஒன்று அதி வேகமாக சென்றுள்ளது.

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த 5-க்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது கார் மோதியது.

இதனையடுத்து பொதுமக்கள் காரை மடக்கி பிடித்து ஒதியஞ்சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காரை ஓட்டி வந்த நபர், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பது தெரிய வந்தது.

போக்குவரத்து போலீசார் புகழேந்தி மீது வழக்கு பதிவு செய்து மது அருந்தி உள்ளாரா என்ற மாதிரி எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்