ஒரே வாரத்தில் 3 கொலை... துடிதுடிக்க கொல்லப்பட்ட இந்தியர்கள்..! அரங்கேறிய கோரங்களின் பின்னணி..?

x

மேற்படிப்பு, பணி, லட்சியம், கனவு என பல காரணங்களுக்காக வெளிநாட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சடலமாக தாயகத்திற்கு திரும்புவது அனைவர் மத்தியிலும் சோகத்தையே ஏற்படுத்தி வருகிறது. அண்மையில், இங்கிலாந்தில் ஹைதரபாத்தை சேர்ந்த தேஜஸ்வினி ரெட்டி என்ற இளம்பெண் பிரேசில் நாட்டை சேர்ந்தவரால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார். போதைக்கு அடிமையான பிரேசில் இளைஞருக்கு பணம் வேண்டுமென்பதால் தேஜஸ்வினியை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த போது இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. மகள் சொந்த ஊருக்கு வந்ததும் திருமணம் செய்து வைக்க ஆசையாக காத்திருந்தபெற்றோர் மகளை சடலமாக கண்டு கதறி அழுதனர். இந்த சோக சம்பவம் நிகழ்ந்த ஓரிரு நாளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் 19 வயதான Grace O'Malley-Kumar,தனது நண்பனை தாக்க வந்த தாக்குதல் காரர்களின் பிடியில் சிக்கி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த துக்க சம்பவங்களில் இருந்தே மீள முடியாத நிலையில், கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.லண்டனில் கெம்பெர்வல் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் 38 வயதான அரவிந்த் சசிகுமார் வசித்து வந்துள்ளார். அவர் மட்டுமன்றி அவருடன் கேரளாவை சேர்ந்த சிலரும் வசித்து வந்தனர்.இந்நிலையில் ஜூன் 17ம் தேதி அதிகாலையில் கேரளாவை சேர்ந்த சலீம் என்பவர் அரவிந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் பிரிந்த உயிர்களை எண்ணி மனம் பதபதைக்க செய்கிறது.


Next Story

மேலும் செய்திகள்