3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை?

x

ஒடிசாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட நிலையில், ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார். ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. தபெரெங்கா-லுடென்காட் வனப்பகுதியில் நடந்த இந்த சண்டையில், 3 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் காயமடைந்த போலீஸ் டி.எஸ்.பி. ஒருவர், பலங்கிரில் உள்ள பீமாபோய் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்