"2ஜி விவகாரம்.. ஏன் இந்த வேண்டாத வேலை?" - நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய திமுக எம்பி டிஆர் பாலு

x

மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யும்படி ஜி.வி.கே குழுமத்திற்கு அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ மூலம், பாஜக அரசு அழுத்தம் தந்ததாக ராகுல் காந்தி மக்களவையில் பேசும் போது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு ஜி.வி.கே குழுமத்தின் துணைத் தலைவர் ஜி.வி.சஞ்சை ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். கடன் சுமை வெகுவாக அதிகரித்ததால், அதை அதானி குழுமத்திற்கு விற்றதாகவும், இதில் யாரும் அழுத்தம் தரவில்லை என்று கூறியுள்ளார். கொரோனா பாதிப்புகளின் போது, விற்பனை தொகையை ஒரே மாதத்தில் அளிக்க அதானி குழுமம் முன் வந்ததால், அவர்களுக்கு இதை விற்பனை செய்ததாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்