2,500 கிலோ போதைப்பொருள்... கேரளாவை அதிர வைத்த புதிய சம்பவம் - வெளியான அதிர்ச்சி பின்னணி!

x

கொச்சி அருகே கடல் பகுதியில் வந்த கப்பலில், போதைப்பொருள் கடத்தல் பிரிவு மற்றும் கடற்படை அதிகாரிகள் நேற்று கூட்டாக அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கப்பலில் இருந்து 2 ஆயிரத்து 500 கிலோ உயர்ரக போதைப்பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருளை பாகிஸ்தானின் சாபஹாரில் இருந்து கொண்டு வந்து, இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினர். கப்பலில் இருந்து தப்பியோட முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு சொந்தமானவை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் இந்த போதைப்பொருளை வாங்க இருந்த வியாபாரி யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்