"அன்பின் விழியில் எல்லாம் அழகே"... திருப்பதி தரிசனத்துக்காக ரயிலில் புறப்பட்ட 1008 குழந்தைகள்

x

சென்னையில் இருந்து ஆயிரத்து 8 சிறப்பு குழந்தைகள், ரயில் மூலம் திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். தனியார் தொண்டு நிறுவனமும், திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து, இந்த சிறப்பு குழந்தைகளை இலவச தரிசனத்துக்காக அழைத்துச் சென்றுள்ளன. சிறப்பு குழந்தைகளுக்கான ரயிலை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுபா ரெட்டி, தமிழ்நாடு புதுச்சேரி ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ரயிலில் பயணம் மேற்கொண்ட சிறப்பு குழந்தைகள் பாட்டு பாடி, ஆரவாரமாக புறப்பட்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்