ட்ரோன் மூலம் 10 யூனிட் ரத்தம் - ஐசிஎம்ஆர் சொன்ன தகவல் | ICMR

x

இந்தியாவிலேயே முதன்முறையாக டெல்லியில் ட்ரோன் மூலம் நோயாளிகளுக்கு தேவைப்படும் ரத்த பாக்கெட்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்க ட்ரோன்கள் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து புதிய முயற்சியாக, கிம்ஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்து ஜெய்பீ தகவல் தொழில்நுட்ப மையத்திற்கு 10 யூனிட்கள் ரத்தம், ட்ரோன் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்