"10 லட்சம் நிதியுதவி எதற்கு..?" கேள்விகளுக்கு விளக்கமளித்த அமைச்சர் பொன்முடி

x

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. எக்கியார்குப்பம் கிராமத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்