"3, 6 மாதம் என்று நேரம் எடுக்க மாட்டோம்" - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

x

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினால், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒப்புதல் பெற்று வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் மின்சாரம், 10 கிலோ அரிசி இலவம், குடும்ப‌ப் பெண்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், டிப்ளமோ படித்தவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த‌தும், 3 மாதம், 6 மாதம் என்று நேரம் எடுக்காமல், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒப்புதல் பெறப்பட்டு, தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்