கர்நாடக தேர்தல் ரிசல்ட் வரும் முன் அண்ணாமலை பரபரப்பு தகவல்

x

கர்நாடகாவில் ஆளும் கட்சி தேர்தலில் வெற்றிப்பெறாது, பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற எழுதப்படாத விதியை பாஜக உடைக்கும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என கட்சியின் மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 1985-க்கு பிறகு ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி தேர்தலில் வெற்றிப் பெறாது, பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற எழுதப்படாத விதியை பாஜக இம்முறை உடைக்கும் என தெரிவித்தார். கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்தாலும் ஒரு முறை கூட பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தனித்து வென்றது இல்லை. இந்த வரலாற்றை பாஜக இப்போது மாற்றும் என தெரிவித்துள்ள அண்ணாமலை, கர்நாடகாவில் பாஜக 130-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிப்பெறும் எனவும், மற்றவர்கள் ஆதரவையும் கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்