DMK | "இதெல்லாம் எனக்கு மறக்க முடியாத.." - MGR பற்றி பழைய நினைவுகளை சொன்ன துரைமுருகன்
எம்.ஜி.ஆர் தன்னை அவரது கட்சியில் சேர அழைத்தபோது, தனது கட்சி திமுக என கூறியதாகவும், அப்போது தனது மனவலிமையை எம்.ஜி.ஆர் பாராட்டியதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் காட்பாடி அருகிலுள்ள எம்.ஜி.ஆர் கோயிலில், அவரது சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலில் எதிரிகள் இருந்தாலும் மனிதநேயம் மற்றும் நட்பை உயர்வாகக் கொண்டவராக எம்.ஜி.ஆர் விளங்கினார் என்றும் நினைவுகூர்ந்தார்.