ஈரானின் அடுத்த உச்ச தலைவராக வாய்ப்புள்ள நபர்களும் படுகொலை? இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரானின் அதிபராக இருந்த காமேனி உயிரிழந்த நிலையில், அடுத்த கட்ட தலைவராக இருந்த நபர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானில் தற்போது நிலவி வரும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தள்ளது. மேலும் அந்த போட்டியில் மொஜ்தபா காமேனி (Mojtaba Khamenei), அலி லாரிஜானி (Ali Larijani) மற்றும் மிர் ஹொசைன் மௌசவி (Mir-Hossein Mousavi) ஆகியோரின் பெயர்கள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் தலைமை போட்டியில் இருக்கக்கூடிய நபர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறியுள்ள நிலையில், ஈரானில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.