உலகம்

ஆங் சான் சூகியை விடுதலை செய்யுங்கள் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

மியான்மரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

மியான்மரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

மியான்மரில் தேர்தல் மோசடி நடந்ததாக கூறி ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் எதிரொலித்துள்ளது. பல மேற்கு நாடுகள் மியான்மர் ராணுவத்திற்கு கண்டனம் தெரிவித்த போதும், சீனா மற்றும் ரஷ்யா பாதுகாத்து வந்தன. இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெசின் முயற்சியால் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மியான்மர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை பாதுகாக்க வேண்டும் எனவும், மனித உரிமைகள் மீறல்களுக்கு ஒரு போதும் வாய்ப்பளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மியான்மர் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விருப்பம் தெரிவித்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"