தெற்கு லெபனானின் ராஸ் பியாடா பகுதியில் உள்ள சுரங்கப்பாதை கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்திய வீடியோவை வெளியிட்டுள்ளது. தாக்குதலை தொடங்குவதற்கு முன் லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள எட்டு நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாகத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்தது. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், இருதரப்புக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.