ஈரானின் முக்கிய பாலம் மீது தாக்குதல் ஈரானின் வடக்கு அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பாலத்தின் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 95 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகத்தில் தகவல் வழியாக உள்ளது. மாகாணத் தலைநகரான கராஜில் அமைந்துள்ள இந்த பி1 பாலம், மத்திய கிழக்கின் மிக உயரமான பாலங்களில் ஒன்றாக விளங்கும் நிலையில், இந்த பாலம் இரண்டு முறை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.