சைப்ரஸ் நாட்டின் பிரிட்டன் ராணுவ தளம் மீது தாக்குதல் சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டன் ராணுவ தளம் ‘அக்ரோதிரி மீது ஈரான் தயாரித்த ட்ரோன்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிறிய அளவிலான சேதம் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா கேட்டுக்கொண்டதன் பெயரில் இந்த தளத்தை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள பிரிட்டன் அனுமதி அளித்திருந்தது. ஈராக், சிரியா மற்றும் ஏமன் போன்ற நாடுகள் மீது முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டபோது இந்த தளத்தை அமெரிக்கா பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.