உலகம்

இந்தியா- சீனா எல்லையில் மோதல் நிகழ்ந்த விவகாரம் - இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சு

இந்தியா - சீனா எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தந்தி டிவி

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் இந்திய சீன விவகாரம் தொடர்பாக முதல் முறையாக தொலைபேசியில் பேச்சு நடத்தினர். அப்போது,

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது என அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்தார். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க, அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து, இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவம் உரிய விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். இரு நாட்டு தலைவர்கள் இடையே எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. எல்லை விவகாரத்தை கையாள்வதில் இருநாடுகளிடையே போதிய ஒத்துழைப்பையும் தகவல் தொடர்பையும் மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"