#iranisraelwar #petroldiesel ஈரான் போர் காரணமாக எழும் எரிபொருள் பிரச்சனைகளை சமாளிக்க போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் உள்ளிட்டவை இந்தியாவிடம் கைவசம் போதிய கையிருப்பு உள்ளதாக இருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்துள்ள மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாய்வுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி , நாடு முழுவதும் பெட்ரோலிய பொருள்களின் விநியோகம் மற்றும் இருப்பு நிலையை தொடர்ந்து கண்காணிக்க மத்திய அரசு 24 மணி நேரம் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.