கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, டென்மார்க் ராணி மார்க்கிரெத்தின் 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளையொட்டி, ராணியின் பல்வேறு விதமான புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக டென்மார்க்கில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், உணவகங்கள், மது கூடங்கள் மற்றும் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.